Wednesday, December 19, 2012

வீட்டிலிருந்தே மாதம் 15000 சம்பாதிக்கலாம். ரெடியா?










Earn Rs15000 per month

Qualification
Typing Skill

Requirement
Normal Speed Computer With Internet Connection ( minimum 256kbps )

Work Time
24 Hours 

Condition

Must work in Night Time 10pm to 6am

Demo Work Link
http://workx.captchaocr.com:8008/login.php

User Name : nila1
Password : 12345


Sincere workers only call me
9150081875

No Deposit

Payment Rate : Rs 50.00 / 1000 Captchas

Type at least 100 images in demo work
If you have Confident to type mean Call me

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, December 18, 2012

தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல


Google Translate என்பது மொழி பெயர்ப்புக்காக கூகுளே வழங்கும் சேவையாகும்
இங்கே சென்று tamil speaking peoples are indians என்று கொடுத்தால், தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று மொழி பெயர்க்கிறது.

ஏற்கனவே மனசாலி தளம் "don't see idiots movie" என்பதை விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழி பெயர்ப்பதை எடுத்து காட்டியது.  பின் அதை அவர்கள் சரி செய்தார்கள்.

இன்று 06:00 pm ற்கு இதை பதிவிடுகிறேன் எப்பொழுது சரி செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, December 17, 2012

பில் கேட்ஸ் அதிர்ந்து போனார்

 
ரசிக்க மட்டும்
---------------------------
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”


தமிழன்டா !!!!!



Bill Gates, Microsoft's chief executive from the company's time. Microsoft's European branch to appoint a chief officer, had been conducting an interview. Nearly five thousand people had come. Everyone குழுமியிருந்தார்கள் a large room. Black coat, blue shirt, tie up with a point on one side to sit kavanittappati everything, our Kandasamy.

Bill Gates walked in, saw 5000 people went a little shocked. Hello, everyone had had. Then, I said. Cikkiram finish, I'd cimpila vaikkanumnnu results.

Wanting to test the technical knowledge and would like to ask a question. Anyway, Microsoft, Microsoft Technology terintutan come. So, I asked.

 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, December 15, 2012

மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா




“ஹலோ, மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா?”

“எப்போடா?”

“நேத்து நைட்டு தான் பிக்கப் பண்ணேன். என்னோட ரூமுலே தானிருக்கு!”

“ரூமுலே வெச்சுக்கிட்டிருக்கியா? அடப்பாவி ஒரு நைட்டு முழுசா முடிஞ்சிடிச்சே!”

“ஆமாம் மச்சான், நேத்து செம ஜாலியா இருந்தது.. கிருஷ்ணன் கூட இன்னைக்கு காலைலேர்ந்து லீவ் போட்டுட்டு என் ரூமுலே தானிருக்கான். நான் ஆபிசுக்கு வந்துட்டேன். திரும்ப சாயங்காலம் போயி...”

“டேய்.. டேய்.. ப்ளீஸ் என்னையும் விளையாட்டுலே சேத்துக்குங்கடா!”

“உனக்கு தான் இந்த மேட்டரே புடிக்காதே மச்சான்.. என்னா கலரு, என்னா கொரலு, கண்ணு ரெண்டும் மான் மாதிரி இருக்குடா!”

“அய்யோ.. சொக்கா.. சொக்கா.. உனக்கெல்லாம் எப்படிடா மாட்டுது?”

“த்ரீ தவுசண்ட் கொடுத்தா யாருக்கு வேணும்னாலும் மாட்டுண்டா”

“எத்தனை நாளைக்குடா வெச்சுக்கிட்டிருப்பே?”

“எத்தனை நாளைக்கா? பர்மணெண்டா வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேண்டா!”

“பர்மணெண்டாவா? ஊர்லே இருந்து எப்பவாவது அப்பா, அம்மா திடீர்னு வந்துட்டாங்கன்னா பிரச்சினை ஆயிடாது?”

“என்னா பிரச்சினை ஆவும்? ஊர்லே இருக்குறப்பவே ஒண்ணு வெச்சிருந்தேண்டா. அம்மா அப்பாவுக்கும் நல்லா தெரியும்!”

“நல்ல குடும்பம் போ! நான் இப்பவே உன் ரூமுக்கு போவட்டாடா.. ஆசையா இருக்குடா!”

“வேணாம்டா. கிருஷ்ணனை டிஸ்டர்ப் பண்ணாதே. அவனே ஆஃபிஸ் டென்ஷனை எல்லாம் மறந்து கொஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கட்டும்!”

“ப்ளீஸ்டா.. உன் ரூமுல்லே வேணாம்னா நான் வேணும்னா சாயங்காலம் எங்கேயாவது வெளியே கூட்டிக்கிட்டு போறேண்டா!”

“உன் இஷ்டம்! ஆனா பார்த்து கூட்டிக்கிட்டு போ. ரொம்ப புதுசு. பயந்துட போவுது!”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்!”

“அப்போ சரி. மட்டன், கிட்டன் வாங்கி கொடுத்துடாதே. எலும்பு கடிக்கக் கூட அதுக்கு தெரியாது. பிஸ்கட் மட்டும் வாங்கிக் கொடு!”

“என்னாது பிஸ்கட்டா?”

“ஆமாண்டா. அய்யர் வீட்டுலே வளர்ந்தது.. பாலும், பிஸ்கட்டும் மட்டும் தான் சாப்பிடுது! பொறந்து ஒண்ணரை மாசம் கூட இன்னும் ஆவலே!”

“மச்சி.. நீ எதைப் பத்திப் பேசுறே?”

“நாயைப் பத்தி பேசுறேண்டா. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தேன் இல்லே. ஒரு பொமரேனியன் வாங்கணும்னு. ஆமா. நீ எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?”

“ம்ம்ம்... நானும் நாயைப் பத்தின்னு நெனைச்சி தாண்டா பேசிக்கிட்டிருந்தேன்” டொக்...

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, December 14, 2012

பிறந்தவுடன் பேசிய குழந்தை

பிறந்தவுடன் பேசிய குழந்தை

 -----ஆச்சர்யம்!!! ஆனா சத்தியமா அது சொல்றது உண்மைங்கோ...........

ஒரு மருத்துவமனை :
அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண்.சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலிஅதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும்மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்குஅழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ்இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்னசெய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்றுநினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்குஇன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது…………………………………….


அந்த நேரத்தில்...
ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.
பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...
அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...
அவரும் ஆவலுடன் அந்த குழந்தையைபார்த்தார்..
அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து...இங்கு கரண்ட் இருக்கா... என்று கேட்டது...
அதற்கு மருத்துவர்இல்லைஎன்று பதிலளித்தார்..

அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...

அதற்கு டாக்டர்...கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...
இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...