Thursday, June 30, 2011

இந்தியாக்கு அடுத்த இடத்தில அமெரிக்கா

இந்தியா  பல விஷயத்தில்  பின் தங்கி இருந்தாலும் ஒரு விஷயத்தில்  அது பல நாடுகளை முந்தி கொண்டு முன்னணியில் உள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவையே அது இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டது. இதை படிக்கும் நீங்கள் இலஞ்சம் வாங்கும் நாடுகளை பற்றி நான் சொல்ல போவதாக எண்ணி விட வேண்டாம். 

நான் எதை பற்றி சொல்ல போகிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒவ்வொரு நாட்டின் நிலைகளை பற்றி சொல்லி விடுகிறேன்.

1)  India

2)  United States

3)  Sri Lanka

4)  United Arab Emirates

5)  United Kingdom

6)   Singapore

7)   Canada

8)   Saudi Arabia

9)   France

10) Ukraine
நண்பர்களே இது எதன் டாப் டென் என்று யூகித்து விட்டீர்களா?
ஹி ஹி இது வேறே ஒன்னும் இல்ல என் ப்ளாக் படித்த audience stats report.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, June 26, 2011

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

செல்போன் காதலால் கோவையில் நடந்த பயங்கரம்.


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

எனது ஞாபகத்தில் மீராவின் கவிதை


மீராவின் கவிதை தொகுப்பான கனவுகள் + கற்பனைகள் = காதிதங்கள். இதில் உள்ள எல்லா கவிதைகளும் அருமையானவை. பல வருடங்களுக்கு முன்னால் படித்தது. இதன் மின் வடிவம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.


என் ஞாபகத்தில் உள்ள ஒரு கவிதை.


இரவில் 
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில் 
காய் கறிக்கடை 
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை 
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?       
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, June 24, 2011

மிஸ்டர் மணிரத்னம் அவர்களே ஆரண்ய காண்டம் பார்த்தீரா?

சிறந்த இயக்குனர் மணிரத்னம். 
நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் முதன்மையானவர் என்று இந்த ஊர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறது. உங்கள் மார்கெடிங் உத்தியை எங்களுக்கும் கொஞ்சம் சொல்வீர்கள? விக்ரமை ஹிந்திக்கு கொண்டு போனீர்கள் . அவரும் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். அவர் மட்டும் அல்ல ராவன் படத்தில் பனி  புரிந்த எல்லோரும் அவர்கள் வேலையை சிறப்பாகவே செய்திருப்பார்கள் சுஹாசினியை தவிர.
ஆரண்ய காண்டம்



நீங்க நிச்சயமாக ஆரண்ய காண்டம் பார்த்து இருப்பிர்கள். பார்க்கவில்லை என்றால் பாருங்கள் . ராவன் படத்தை நீங்கள் எப்படி சொதப்பி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒப்பீடு

நீங்களும் ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தை தான் எடுத்தீர்கள்.குமார ராஜாவும் அதையே எடுத்தார்.  அனால் என்ன ஒரு வித்தியாசம். ஆரண்ய காண்டம் என்றால் காட்டில் தலை மறைவு வாழ்க்கை வாழும் ராமனை பற்றியது. உங்கள் காண்டத்தில் விக்ரமும் , இங்கே சம்பத்தும் தலைமறைவாக இருக்கிறாகள் ( புதிய ஆரண்யத்தில் ஒரே ஒரு பகல் மட்டுமே கதையின் சம்பவங்கள் நடக்கிறது )  சம்பத்தின் மனைவி கடத்தப் படுகிறாள். அவளை அவன் மீட்கிறான்.
குமார  ராஜாவின் கதை சொல்லும் தரம் நிச்சயமாக உங்களை பிரமிக்க வைத்து இருக்கும். பாத்திரப் படைப்பு . கதை மாந்தர்களின் பெயர்கள் மிருகங்களின் பெயர்களாக அமைத்தது. (இதற்கு முன் மகாநதியில் எல்லார் பெயர்களும் ஒரு நதியின் பெயராக இருக்கும்)
அப்புறம் கடைசியாக நீங்க குமார ராஜாவின் அடுத்த படத்தில் உங்களை அவரின் உதவி இயக்குனராக இணைத்து கொள்ளுங்கள். படியிங்கள். அதன் பின் படம் இயக்கலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, June 23, 2011

கணிதம் கற்போம் - 03

ஒரு விளையாட்டு கதை.



மிக பெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு நாள் உற்சாகமாக வீடிற்கு வந்தார்.வீட்டிற்கு வந்ததும் அவர் எல்லாரையும் அழைத்து தன் உற்சாகதிற்கான காரணத்தை சொன்னார்.

நான் இன்று ஒருவனை சந்தையில் பார்த்தேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இவரை போல வேறு கிறுக்கன்கள் இருக்க முடியாது என்றார்.எங்களுக்குள்  ஒரு மாதத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை நாங்கள் போட்டு கொண்டோம் . அது தான் என் மகிழ்ச்சிக்கான காரணம் என்றார்.வீட்டார் என்ன ஒப்பந்தம் என்று கேட்டார்கள்.

தினமும் அவன் என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் நான் அவனுக்கு முதல் நாள் ஒரு பைசா காசும், இரண்டாம் நாள் இரண்டு பைசாவும், மூன்றாம் நாள் நாலு பைசாவும் இது போல் ஒரு மாதம் நான் பைசாவிளும் அவன் லட்சமாகவும் கொடுக்க வேண்டும் இது தான் ஒப்பந்தம் என்றார்.
வீட்டில் உள்ளவர்களுக்கு நம்ப முடியவில்லை. சிறுது நேரம் பேசி தூங்கி விட்டார்கள். ஆனால் நம் செல்வந்தருக்கு தான் தூக்கம் வரவில்லை.தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி சந்தோச பட்டுக் கொண்டார்.
சேவல் கூவ தொடங்கி விட்டது .யாரோ கதவை தட்டினார்கள்.திறந்து பார்த்தார்.வெளியே ஒப்பந்தகாரர். அவர் கையில் ஒரு  பெட்டி. 
இவரிடம் அந்த பெட்டியை தந்தார் 
எண்ணிக்கொள்ளுங்கள் என்று நூறு ரூபாய் கட்டுக்கள் பத்தை தந்தார். இவர் அதை எண்ணி சரி பார்த்து கொண்டார். 
மிகச் சரியாக இருந்தது.
இவரிடம் என் பங்கு என்று கேட்டார். இவரும் கொடுக்க வேண்டிய ஒரு நயா பைசாவை தந்தார்,. 
அதை வாங்கிக்கொண்டு நாளை வருகிறேன் என்று அவர் சென்று விட்டார்.  

நம் செல்வந்தருக்கு பயங்கர சந்தோசம் ஒரு பக்கம் சந்தேகம். ஒரு வேலை திருட்டு பையனாக இருப்பானோ . நம் கஜானா எங்கே இருக்கிறது என்று நோட்டம் விட வந்து இருப்பானோ என்று.
மறு நாள் வந்தது 
சேவல் கூவியது
பொழுது புலர்ந்தது 
பொழுது தளர்ந்தது
அந்தி வந்தது 
இவர் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருந்தார் . ஒப்பந்தம் போட்டவர் வரவே இல்லை. சரி இனி அவன் வரமாட்டான் , பையன் சுதாசிருப்பான் என்று எண்ணிக்கொண்டார் அப்பொழுது கதவு தட்டப்பட்டது. வெளியே ஒப்பந்தகாரர் . லட்சம் கொடுத்தார் , இரண்டு பைசா வாங்கிகொண்டு சென்றார். மூன்றாம் நாள் ட்சம் கொடுத்தார் , நான்கு  பைசா வாங்கிகொண்டு சென்றார். நான்காம் நாள் எட்டு பைசா என்ற கணக்கில் ஒரு மாதம் வாங்கிகொண்டு சென்றார். நடுவில் நம் செல்வந்தர் இந்த ஒப்பந்தத்தை ஒரு மாதம் என்று போடாமல் இரண்டு மாதம் போட்டு இருக்கலாமே என்று வருத்தப்பட்டு கொண்டார்.


சரி இப்போ நீங்க சொல்லுங்க இதுல யார் கிறுக்கன்?


 ஊழலை ஒழிக்க பிறந்த ரஜினிக்கும், ஷங்கருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த பணத்தில் எத்தனை  சதம் பங்கிருக்கும் என்று யாரவது சொல்ல முடியுமா?

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, June 20, 2011

கணிதம் கற்போம் - 02

முந்தைய பதிவில் 5 ல் முடியும் எண்களை அதே எண்ணால் பெருக்குவதை பார்த்தோம். இந்த பதிவில் வேறு சில எண்களை அதே எண்ணால் பெருக்குவதை எப்படி என்று பாப்போம்.
11 x 11 = ?

11+1 = 12 x 10 =120 + 1
answer 121
11 x 11 

11 ஐ கடைசி எண்ணான 1 உடன் கூட்டவும்
11 + 1
விடை 12 கிடைக்கும் 
இப்பொழுது 11 இரண்டாக பிரித்து கொள்ளவும் (அதாவது  11 என்றால் 1  1 ,      181 என்றால் 18   1 )  
அதன் பின் பிரித்த பொழுது  கிடைத்த முதல் இலக்கத்தின் 10 ன் மடங்கை முதலில் கிடைத்த விடையுடன் பெருக்கவும். (அதாவது 11 என்றால்  1 x 10
18 என்றால் 18x10 ) 
12 x 10 = 
விடை 120 கிடைக்கும்.

இப்பொழுது கிடைத்த விடையான 120 உடன் நாம் இரண்டாக பிரித்த எண்ணின் இரண்டாவது இலக்கத்தை அதே எண்ணுடன் பெருக்கும் பொழுது கிடைக்கும் விடையை (1 x 1 ) 

  120 + (1 x 1)= 
120 + 1 = 121
61 x 61 = ?
61+1=62 x 60 = 3760 + 1
answer 3761


181 x 181 = ?

181+1=182 x 180 = 32760 + 1
answer 32761

இந்த முறை மூலம் நாம் எல்லா எண்களின் பெருக்கல்களை கண்டு பிடிக்கலாம். இது எளிமையான முறை என்று நான் சொல்ல போவதில்லை . நாம் இந்த கணித முறை மூலம் என்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வரிசையை உணரலாம்.

36 x 36 = ?
36+6=42 x 30 =1260 + ( 6 x 6 )
answer 1296


1001 x 1001 =?
1001+1 =1002 x 1000 = 1002000+1
answer 1002001



1507 x 1507 =?
1507+7=1514 x 1500 =2271000 + (7 x 7)
2271049


இந்த கணக்குகளை மன கணக்காக செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். செய்யலாம் . அதற்கும் வழி இருக்கிறது .

அடுத்து அதை பற்றி பார்போம்

அடுத்த பதிவில் ஒரு சுவராஸ்யமான கணக்கு கதையை பார்போம்.
வாக்கிட்டி பின்னுட்டம் இடவும்.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, June 19, 2011

கணிதம் கற்போம் - 01

ஆரம்பத்தில் ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த போது பல நல்ல புத்தகம் மிக குறைந்த விலையில் நமக்கு கிடைத்தது.அதில் கம்யுனிசியம் மட்டுமில்லாது இலக்கியம், கணிதம், அறிவியல் மற்றும் எல்லா துறை சம்பந்தப்பட்ட நூல்களும் இருந்தன. நான் சிறு வயதாக இருந்த போது எங்கள் வீட்டிற்கு வரும் சோவியத் யூனியன் புத்தகங்கள் அதில் இருக்கும் சிறுவர் கதைகள் பலதும் எனதும் என் நினைவில் இருக்கின்றன. எங்கே சொல்லு என்றால் என்னால் உடனே சொல்ல முடியாது.

நான் அந்த நாளில் படித்த விளையாட்டு கணிதம் எண்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை என்னை யோசிக்க வைத்தது. அதன் பின் நான் கணிதத்தை கவினிக்க ஆரம்பித்தேன் ( கணித பாடம் தவிர்த்து )

நான் கற்று கொண்ட சில கணக்குகளை இங்கே தருகிறேன்.

முதலில் 5ல் முடியும் (5 x 5, 15x15 ) இதை போல உள்ள பெருக்கல்களை சுலபமாக பெருக்குவது பற்றி பாப்போம்.

205 x 205 = ? பார்ப்போமா
பழைய முறை
205
205 x
----
 1025
 000
410
-----
42025
-----

புதிய  முறை
205 x 205

20 5 இரண்டாக  பிரித்து  கொள்ளுங்கள் 
முதல் என்னை இவ்வாறு பெருக்கி கொள்ளுங்கள்
1) 20 x (20+1) = 20 x 21 = 420

2) 5 x 5 = 25
  முதல் விடையையும் இரண்டாவது விடையையும் சேர்த்தல் பெருக்கல் விடை கிடைத்து விடும்

42025


45 x 45 = ?
 4 x 5 = 20
5 x 5 =25
answer 2025


85 x 85 = ?
8 x 9 = 72
5 x 5 = 25
answer=7225

2) 11 x 11, 111 x 111, 1111 x 1111 ஒற்றுமையை  பாப்போம்

11
11 x
---
121
---

111
111 x
-------
12321
-------

1111
1111 x
---------
1234321
---------
இன்னும்  விளையாடலாம்
பின்னுட்டத்தை எதிர் பார்க்கிறேன்.




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, June 7, 2011

எனக்கு பிடித்த சில ஹிந்தி பாடல்கள் - 01

1HERO
2NOORIE

3AASIHQUE
4AARADHANA
5KUCH KCUH HOTA HAI


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...