Tuesday, October 11, 2011

நகைச்சுவை கதை கூட்டல் பதினெட்டு


ஒரு ஊர்ல ஒரு மகாராசா இருந்தான். அவனோட பட்டத்து யானைனா அவனுக்கு உசுரு. அது போல வேற ஒரு யானைய எங்கே தேடினாலும் கண்டுபுடிக்க முடியாது என்று பெரும பட்டுகிட்டு இருந்தான். மத்த யானைய விட அது என்ன வித்தியாசம்னா . அந்த யானை ஆடாம அசையாம அப்படியே நிக்கும். யாராவது புதுசா வர்றவங்க பார்த்தாங்கன அத ஒரு 'பொம்மை யானை' என்றே சொல்லுவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் அப்படியே நிக்கும். ராஜா உக்கார சொன்ன உக்காரும் . நிக்க சொன்ன நிக்கும். திரும்ப சொன்னா திரும்பும். ராசாவ   பாக்க எவென் வந்தாலும் ராசா  அவனோட யானைய காட்டாம இருக்க மாட்டான். இப்படி இருக்கிறப்போ அவன பாக்க வந்த அயல் தேசத்து ராசா ஒருத்தன் நம்ம ராசாவ பாத்து. "இங்க பாருப்பா நீ பெரும பட்ற மாதிரி இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. அதுவும் இல்லாம உன் யானை கிட்ட ஏதோ பிரச்சனை இருக்கு. இத மொத ஒரு நல்ல வைத்தி கிட்ட காட்டுன்னு" சொல்லிட்டு போயிட்டான்.


அன்னைக்கு இருந்து நம்ம ராசாவுக்கு  தூக்கமே வரல. என்னடா இவன் இப்படி  சொல்லிபோட்டு போயிட்டான். "ஒரு வேலை அவன் சொன்னது தான் உண்மையோ?" என்று ஒரே யோசனை. ராசாவும் யானையை பார்த்தான். அவனுக்கும் கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பிச்சது. வைத்தி கிட்ட காட்டினான். அவனும் யானைய பாத்துட்டு "ஆன நல்லாத்தான் இருக்கு"னு சட்டிபிகேட் கொடுத்துட்டான். ஆனாலும் ராசாவுக்கு திருப்தி வரல. சரி யாரையாவது கூப்பிட்டு யானைய "ஆட அசைய" வைக்கலாம்னு முடிவு பண்ணினான்.

அதுக்காக யார் யாரையோ எல்லாம் கூப்பிட்டான்.

ஆனா யாரும் ஒன்னும் பண்ண முடியல.

பரிசு கொடுக்குறேன்னு சொல்லிப் பார்த்தான்.

அப்பாவும் ஒன்னும் பண்ண முடியல.

யானைய ஆட அசைய செய்றவனுக்கு பாதி தேசம் தர்றேனான். முடியாம போன தலை எடுத்துருவேனான் .

அரண்மனைல தலை தான் சேர்ந்தது. யாரும் ஒன்னும் பண்ண முடியல.


கடைசியா "நான் பண்றேன் ராசனு" ஒருத்தன் வந்தான்.

வந்தவன் குள்ளன்.

 அவன பார்த்த ராசா "வேணாம்டா எவன் எவனெல்லாம் வந்து தோத்து போயிட்டாங்க.நீ குள்ளப் பையனா இருக்க, ஒரு சந்தர்ப்பம் தர்றேன். சொல்லாம கொள்ளாம வந்த வழியா ஓடிப்போயிடு" என்றான்.


அதுக்கு அவன் ஏகத்தாளமா  "இங்கே பாருங்க ராசா, உங்களுக்கு ராஜியத்துல பாதி தர விருப்பம் இல்லைனா சொல்லுங்க நான் போயிர்றேன்" என்றான்.


"சரிடா நீ ஆரிம்பி . ஆனா நீ மட்டும்  யானைய ஆட அசைய செய்யலைனா உன் தல யானைய வச்சே நசுக்கிடுவேன்" என்னு ராசா சொல்லிட்டான்.

போட்டி ஆரம்பம் ஆனது.

குள்ளன் ராசாகிட்ட போயி "யானை கால கொஞ்சம் விரிக்க சொல்லுங்க ராச"னான்.

ராசாவும் அவன் சொன்னா மாதிரியே  யானைய செய்ய  சொன்னான்.

இப்போ குள்ளன் யானைக்கு கீழ சுத்தி ஓடி போய் அவன் விரல வச்சு 'கிச்சு கிச்சு' மூட்டினான். அப்போவும் யானை அசரல. முடிவா அவன் யானையோட குறியில கைய வச்சு இந்த மனுசப் பசங்க சுயமா செய்ற மாதிரி செஞ்சு விட்டான்.

இப்போ யானைய பார்க்கணுமே. ரொம்பவும் சந்தோசமா ஆடி அசைய ஆரம்பிச்சது.

ராசாவுக்கு இத பார்த்து பயங்கர கோபம். இந்த குள்ளப் பையன்  நம்மள ஏச்சு புட்டானே என்று. இருந்தாலும் வேற வழி இல்ல . பந்தயத்துல ஜெயிச்ச்சதுனால அவன் நாடு, படை என்று இருக்கிறத பாதியா பிரிச்சு கொடுத்துட்டான். இப்போ குள்ளம் நம்ம ராசாவுக்கு சமமா ஆயிட்டான். ராசாவால இத ஜீரணிக்க முடியல. மறுபடியும் மறு நாளே  ஒரு பந்தயம் வச்சான். இந்த தடவ ஒரு நிபந்தனையோட. அது என்னனா  யானைய தொட கூடாது . ஆனா யானைய ஆட செய்யணும் அசைய செய்யணும்.

மறுநாளும் நம்ம குள்ளம் வந்து நின்னான்.

ராசா கிட்ட பரிசு என்னானு கேட்டான்.

ராசா அவன் கிட்ட " ஜெயிச்சா என் மகளையும் மிச்சம் என் கிட்ட இருக்கிற நாட்டையும் தாரேன். ஆனா தோத்துட்டா நேத்து நீ ஜெயிச்சத எனக்கே தந்துரனும்" என்று சொன்னான்.

குள்ளன் அதுக்கு சம்மதிச்சு போட்டிய ஆரம்பிக்கலாம்னு கேட்டான்.

நேத்து மாதிரி நீ பண்ண கூடாது. யானைய தொடாம பண்ணனும்னு சொன்னான்.

குள்ளன் அதுக்கும் சம்மதம்னு சொன்னான்.

இந்த தடவ ராசா கிட்ட ஒரு கோக்காலி கேட்டான்.

அது மேலே ஏறி யானை காது கிட்ட போய் ஏதோ சொன்னான். அதுத்த நொடியே யானை அப்படி ஒரு ஆட்டம் ஆடினுச்சு.

நம்ம ராசாவுக்கு என்ன நடக்குதுனே புரியல . இப்போவும் வேற வழி இல்ல . சொன்னபடி செய்யணும். இந்த குள்ளன் யானை கிட்ட போய் என்ன சொன்னானு தெரிந்து கொள்ளவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் போல ஆயிடிச்சு .
 அவன கூப்பிட்டு "யானை காதுல அப்படி என்ன தான்டா சொன்ன" என்று கேட்டான்.

குள்ளன் அதுக்கு சொன்னான் " மறுபடியும் நேத்து மாதிரி செய்யவா?" என்று.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

மனசாலி said...

அட்வான்ஸ் நன்றி ( பின்னுட்டம் போட போகிறவர்களுக்கு)

நாய் நக்ஸ் said...

Super.....

கோகுல் said...

ஹி ஹி!

Mohamed Faaique said...

உங்க மனசுல படுரதெல்லாம் படு பேஜாரா இருக்கு பாஸ்ஸ்ஸ்

மனசாலி said...

\\\Mohamed Faaique said... உங்க மனசுல படுரதெல்லாம் படு பேஜாரா இருக்கு பாஸ்ஸ்ஸ்\\\

அப்போ இந்த மாதிரி கதையெல்லாம் வேண்டாம்னு சொல்றீங்களா?

Mohamed Faaique said...

///\\\Mohamed Faaique said... உங்க மனசுல படுரதெல்லாம் படு பேஜாரா இருக்கு பாஸ்ஸ்ஸ்\\\

அப்போ இந்த மாதிரி கதையெல்லாம் வேண்டாம்னு சொல்றீங்களா?///

அப்படி இல்ல.. உங்க ப்லாக்.. உங்களுக்கு எது பிடிக்குதோ அத எழுதுங்க...

Tirupurvalu said...

Manasaali,

Good job my dear don't stop this type of jokes this is useful for to laugh a long time

மனசாலி said...

Tirupurvalu said...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி.

portfolio said...

:) என்னா ஐடியா!!!குள்ள ராசாவுக்கு உடம்பு வளரலைன்னாலும்,மூளை நல்லா வளர்ந்திருக்கு.