Monday, October 3, 2011

என்னை கவர்ந்த கவிதைகள்.





அழகான பொருட்களெல்லாம் உன்னை 
நினைவுப்படுத்துகின்றன உன்னை
நினைவுப்படுத்துகிற எல்லாமே
அழகாகக் தான் இருக்குகின்றன


 
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.


 
சொல்லாமல் வந்து விடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சினுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்த சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாக இருக்கிறதா?





உன்னிடம் எந்தக் கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சி தான்
எனினும் வருத்தமாக இருக்கிறது. நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.



நாம் இருவரும் தனியாய் இருக்கையில்...
இந்த கண்ணாடிக்கு ஏன் இத்தனை 
கண்கள் முளைத்துவிடுகின்றன! 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யதார்த்தமான அழகிய கவிதைகள்...

படத்திற்கு ஏற்றார்போல் அழகாக பொருந்தியிருக்கிறது...

மனசாலி said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றி நண்பா

Mohamed Faaique said...

தபூ சங்கர் கவிதைகள் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி

மனசாலி said...

Mohamed Faaique said...

ஆம் நண்பரே

Anonymous said...

http://www.thamizhstudio.com/competitions_25.php

நாவலந்தீவு said...

கவிதை செம... செம.
சூப்பர். பகிர்வுக்கு நன்றி.

rajkumar said...

Super