Tuesday, July 19, 2011

ஒரே இடுகையை இரண்டு முறை திரட்டியில் இணைப்பது எப்படி.?

ஒரே இடுகையை இரண்டு முறை திரட்டியில் இணைப்பது எப்படி.?
நாம் நம் மூளையை கசக்கி (அப்படி ஒன்னு இருக்கா என்ன?) ஒரு இடுகையை எழுதி இருப்போம். அல்லது அட்ராசக்க தூக்குடா அத என்று அண்ணன் பாணியில் அச்சு ஊடகத்தில் வந்ததை காபி அண்ட் பேஸ்ட்  பண்ணி இருப்போம்.(நான் சி. பி பத்தி சத்தியமா இங்கே எழுதல. நான் மதுரைக்காரன். அண்ணன் என்று சொன்னது எங்க அண்ணன) அத நாம இடுகை திரட்டில இணைத்து இருப்போம். ஆனா அத எவனும் படிச்சு இருக்க மாட்டாங்க.
சரி அது தான் எல்லாருக்கும் நடக்குதே.இப்போ அதுக்கு என்ன? என்று கேட்பவரா நீங்கள்.இனி நீங்கள் கவலை பட வேண்டாம். உங்களுக்கு நான் ஒரு தீர்வு சொல்கிறேன். அதாவது நாம நம்ம இடுகையை படிக்காம தப்பிச்சு போன அந்த அதிர்ஷ்டசாலிகளை. எப்படி மறுபடியும் பொறி வைத்து பிடித்து நம்ம இடுகையை படிக்க வச்சு. அவங்க போன ஜென்மத்துல பாவம் பண்ணினவங்க என்று நிரூபிப்பது எப்படி என்று சொல்ல போறேன்.
நீங்க முதலில் என்ன பண்ணி இருப்பீங்க. அட்ரஸ் பார்ல இருக்கிற உங்க இடுகையோட லிங்கை திரட்டியில் சமர்ப்பிக்கும் இடத்தில் பேஸ்ட் பண்ணி இருப்பீங்க. அதாவது இதை
http://manasaali.blogspot.com/2011/04/blog-post_05.html 
இப்போ இந்த இடுகையையே மறுபடியும் இரண்டாவது முறையா பேஸ்ட் பண்ணுங்க WWW சேர்த்து. அதாவது இப்படி
http://www.manasaali.blogspot.com/2011/04/blog-post_05.html 

இந்த தடவ இடுகையோட தலைப்ப மாத்திருங்க.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.

மனசாலி said...

நன்றிக்கு நன்றி