Sunday, July 31, 2011

எல்லாமே சைவம் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ.





 

ஒரு சைவ ஜோக்:-

தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 'இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க'. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், 'அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..'.

அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 'என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?'. அதுக்கு அமைச்சர், 'அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..' என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, 'எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..'. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், 'ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..' என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

தமிழனா கொக்கா?


 

பழம்பெரும் உலக நடைமுறை ஒன்று:-

ஏதாவது விசேஷத்திற்கு சென்றால், ஒரு தம்பதி இன்னொரு தம்பதியை பார்க்க நேர்ந்தால், மனைவிகள் இருவரும் தங்கள் புடவையையும் நகையையும் ஒப்பிட்டு பார்த்து ஏக்கத்தில் பெரு மூச்சு விடுவார்கள்..

ஆனால் கணவன்கள் இருவரும் தங்கள் மனைவிகள் இருவரையும் ஒப்பிட்டு
பார்த்து பெரு மூச்சு விடுவார்கள்..


 
ஒரு சைவ ஜோக்:-

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்.........
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?
அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்...பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

சாப்பிட்டு முடித்த பிறகு...

அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..
மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்...
அப்பா:- ??????????!!!!

கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா..




 

ஒரு சைவ ஜோக்:-

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்:- முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்:- முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்:- ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்:- சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...








 

ஒரு சைவ ஜோக்:-

பள்ளியில் டீச்சர் மாணவனிடம் கேட்கிறார்...

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ...?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- ?????????!!!!!!!!!!!


 


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

பொ.முருகன் said...

ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?

மாணவன் : ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது.

மனசாலி said...

ha ha

கோகுல் said...

ஹா ஹா அருமை.

Jayadev Das said...

\\அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்.\\ This is not a joke. Factu..... Factu..... Factu.....