Sunday, September 18, 2011

புரட்டாசி மாசம் சைவம்ப்பா ஜோக்


சைவ ஜோக்:-
டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.

கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.

டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.

ன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.

டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.

அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை.

டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள்.

ன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள்.

டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட்' என்று கத்தினான்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Mohamed Faaique said...

எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க..

கோகுல் said...

என்ஜியரிங் மூளை நல்லாவே வேலை செய்யுது போங்க!

Tirupurvalu said...

Engineer brain appadiya eruku or Doctors read in dublicate college ?
Connect yr blog in Tamil10 to get more readers