Tuesday, August 9, 2011

நம்ம ஐந்து பசங்கள்ல கடைசி பையன் அப்பா மட்டும் வேற தானே?



 

ஒரு ஜோக்:-

தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..



சுப்புரமணி ஜோக்:-

டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?

சுப்புரமணி :-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சுப்புரமணி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..



ஒரு சைவ ஜோக்:-

ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் உதவியாளர் வேலைக்கு இன்டர்வியு நடத்தியது. மூன்று பேர் கலந்து கொண்டார்கள். இன்டர்வியு நடத்தியவர்கள் வந்தவர்களிடம் ஒரு மனிதனின் பக்கவாட்டு முகம் கொண்ட போட்டோவை காட்டி அதை பற்றி கருத்துக்களை கேட்டனர்..

முதல் ஆள்:- சார்..இந்த
ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது..

இன்டர்வியுவர்:- எப்படி சொல்றிங்க..


முதல் ஆள்:- இவனுக்கு ஒரு காது தானே இருக்கு சார்..எப்படி கண்ணாடி போட முடியும்?


இன்டர்வியுவர்:- அறிவு கொழுந்து...போய்யா வெளிய...

.........

இரண்டாவது ஆள்:- சார்..இந்த ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க மாட்டான் சார்..


இன்டர்வியுவர்:- என்னய்யா நீயும் அதையே சொல்லுற..என்ன காரணம்?


இரண்டாவது ஆள்:- இவனுக்கு ஒரு கண்ணு தானே இருக்கு சார்..


இன்டர்வியுவர்:- ம்....ஒரு கண்ணா...நல்ல யோசிக்கிற...ஓடி போய்டு...

.............

மூன்றாவது ஆள்:- சார்..இந்த ஆள் காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கான் சார்..


இன்டர்வியுவர்:- சூப்பர்.. நீ ஒருத்தன் தான்யா வித்யாசமா சிந்திச்சி இருக்க..


மூன்றாவது ஆள்:- நன்றி சார்..வேலை எனக்கு தானே சார்..


இன்டர்வியுவர்:- கண்டிப்பா உங்களுக்கு தான்..அது சரி..நீங்க மட்டும் எப்படி வித்யாசமா காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கானு சொன்னிங்க..


மூன்றாவது ஆள்:- ரொம்ப ஈசி சார்..இவனுக்கு ஒரு கண்ணு, ஒரு காது தான் இருக்கு, கண்டிப்பா மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது...அதான் காண்டக்ட் லென்ஸ் போட்டிருப்பான்னு சொன்னேன்..


 
ஒரு சைவ ஜோக்:-

ஒரு கஞ்சன் வீடு எரிஞ்சி போச்சி. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அவன விசாரிச்சது..

போலீஸ்:- ஏன்யா.. வீடு முழுக்க எரியற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?
கஞ்சன்:- தீ அணைப்பு வண்டிக்காக மிஸ் கால் கொடுத்துட்டு இருந்தேன் சார்..


 
ஒரு அசைவ ஜோக்:-

சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் த
ன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..

கணவன்:- நான் ரொம்ப நாளா
உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..

மனைவி:- கேளுங்க..


கணவன்:- நம்ம ஐந்து பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..

மனைவி:- ஆமாங்க..

கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?

மனைவி:- நீங்க தாங்க..

கணவன்:- ??????????
(உயிர் பிரிந்தது..)
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அனைத்து ஜோக்குகளும் அருமையிலும் அருமை
குறிப்பாக கடைசி !
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மனசாலி said...

நன்றி ரமணி அவர்களே